சானிடைசர்களுக்கு பதிலாக ஆல்கஹால் பயன்படுத்தலாம்! ஜப்பான் அரசு அதிரடி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்காக அனைத்து நாட்டு அரசுகளும் மிக தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து, அனைத்து மக்களும் முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி சானிடைசர்கள் அல்லது ஆல்கஹால் கலந்த சானிடைசர்கள் கொண்டு கழுவ வேண்டும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மது விற்பனை செய்யும் தொழிற்சாலைகளில், சானிடைசர்களும் தயாரிக்கப்படுகின்றனர். இது கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கே சரியாக உள்ளது. எனவே, சானிடைசர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒவ்வொரு சானிடைசரிலும் 70 முதல் 80 சதவீதம் ஆல்கஹால் கலக்கப்படுவதால், ஜப்பானில் சானிடைசர்களுக்கு பதிலாக நேரடியாக ஆல்கஹால்களை பயன்படுத்தியே கைகளை சுத்தம் செய்யலாம் என அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. வோட்காவுக்கு வீரியம் அதிகம் என்பதால், அதனை தண்ணீருடன் கலந்து பயன்படுத்துமாறு அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025