தீமைகள் பல இருந்தாலும் காபியில் நன்மைகளும் உள்ளது, அறியலாம் வாருங்கள்!

Published by
Rebekal

நாம் தினமும் காலையில் எழுந்ததும் கண் விழிக்கும் போதே கண்முன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது காபிதான். அதிகம் அருந்துவதால் தீமையை தந்தாலும், இந்த காபியில் சில மருத்துவ குணங்களும் ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளது. அவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

காபியில் உள்ள நன்மைகள்

காபியில் காஃபைன் எனும் வேதிப்பொருள், பொட்டாசியம் ,அண்டிஆக்சிடன்ட்ஸ் மெக்னீசியம் மற்றும் பி காம்ப்ளக்ஸ் ஆகிய சத்துகளும் அடங்கியுள்ளது. காஃபைன் எனும் வேதிப்பொருள் ஹார்மோனை உற்பத்தி செய்ய உதவுவதுடன் மூளையை பாதுகாப்பாக வைத்திருக்கவும் பயன்படுகிறது. இதயம் வேகமாக துடிக்க வைத்து உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதுடன், சுவாச குழாய பிரச்சினை உள்ளவர்களுக்கும் விரைவில் சுகமளிக்கிறது. வளர்சிதை மாற்றத்தையும் குடல் அசைவு செயல்பாட்டையும் அதிகரிக்க செய்வதால் இந்த காபி மூலமாக மலச்சிக்கல் நீங்குகிறது. மேலும் மன அழுத்தத்தை போக்கும், நரம்புத்தளர்ச்சி, கல்லீரல் நோய் இதய நோய், சர்க்கரை நோய் ஆகியவற்றை நீக்குவதற்கும் பயனுள்ளதாக காப்பி அமைகிறது.

காபியில் உள்ள தீமைகள்

ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்க கூடிய காஃபைன் எனும் வேதிப்பொருள் காபியில் அதிக அளவில் இருப்பதால் அளவுக்கு மீறும் பொழுது அது நமது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. காபிக்கு அடிமையாக சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இதனால் உடல் எடை அதிகரிப்பதுடன், மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு கப் காபியில் 80 முதல் 120 மில்லி கிராம் அளவு காஃபைன் உள்ளது. எனவே சாப்பாட்டுக்கு பின்பதாக காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் காபியில் அதிக அளவு சர்க்கரை சேர்த்து குடிப்பதை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். இரவு தூங்குவதற்கு முன்பாக காபி குடித்துவிட்டு உடனடியாக தூங்கக்கூடாது. மேலும், தலைவலி மாத்திரையை காபியோடு சாப்பிடுபவர்கள் நிச்சயம் இனி அதை தவிர்த்து விடுங்கள் ஏனென்றால் அந்த மாத்திரையின் பாவரை காபி இல்லாமல் ஆக்கிவிடும். குறிப்பாக கர்ப்பிணிகள், அல்சர் உள்ளவர்கள் செரிமான பிரச்சனை உள்ளவர்களும் இந்த காபியை தவிர்ப்பது நல்லது.

Published by
Rebekal

Recent Posts

இரட்டைக் கொலை., திமுக ஆட்சியின் லட்சணமா? இபிஎஸ் கடும் கண்டனம்!

இரட்டைக் கொலை., திமுக ஆட்சியின் லட்சணமா? இபிஎஸ் கடும் கண்டனம்!

சென்னை : ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசை பகுதியை சேர்ந்த ராமசாமி - பாக்கியம் தம்பதி அவர்களின் பண்ணை…

14 minutes ago

5 மற்றும் 8ஆம் வகுப்பில் ஃபெயில்! சிபிஎஸ்இ முடிவுக்கு அன்பில் மகேஷ் கடும் கண்டனம்!

சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…

1 hour ago

“பயங்கரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் இந்தியாவுக்கு உதவும்!” அமெரிக்கா நம்பிக்கை!

வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

2 hours ago

Live : அதிமுக செயற்குழு கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

3 hours ago

பாஜகவுடன் கூட்டணி ஏன்? இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

4 hours ago

ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

5 hours ago