அலசும் அமெரிக்கா உளவுத்துறை.! சீன ஆய்வகத்தில் உருவானதா கொரோனா.?

Published by
பாலா கலியமூர்த்தி

உஹான் ஆய்வகத்தின் வைரஸ் தொடர்பான பரிசோதனையின் போது கொரோனா வெளிப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா உளவுத்துறை சந்தேகப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அந்நாட்டு ஆய்வகத்தில் இருந்து உருவாக்கப்பட்டதா என்பது குறித்து அமெரிக்கா உளவுத்துறை விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் எப்படி உருவானதென்று இன்று வரை மர்மமாகவே இருந்து வருகிறது.

முதலில் உஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் அங்குள்ள மீன் சந்தையில் உருவாகவில்லை என்றும் அதற்கு மாறாக சீனா ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்கா சந்தேகப்பட்டு வருகிறது. உஹான் மருத்துவ ஆய்வகத்தின் வைரஸ் தொடர்பான பரிசோதனையின் போது கொரோனா வெளிப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா சந்தேகப்படுவதாகவும், அதனை உறுதிபட தெரிவிக்க ஆதாரங்கள் ஏதும் இல்லையென்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் குற்றம்சாட்டுகளை முற்றிலுமாக சீனா மறுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பிறப்பிடம் மற்றும் பரவல் முறையை மறைக்கவில்லை என்று அந்நாட்டு வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆய்வகத்தின் மனிதனின் தவறால் கொரோனா உருவானது என்பதற்கு ஆதாரம் இல்லையென உலக சுகாதார அமைப்பு தெரிவித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் கொரோனா வைரஸ் உருவான விதம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தகுந்த ஆதாரங்களை நிரூபிக்கும் வரை சந்தேகங்கள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கும் என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

5 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

6 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

7 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

7 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

8 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

8 hours ago