கொரானா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகி நடிகர் அமிதாப்பச்சன் வீடு திரும்பியுள்ளார் என்று செய்தி வெளியான நிலையில் விளக்கம் அளித்துள்ளார் அவர்.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், அண்மையில் பாலிவுட் நடிகர் ஆகிய அமிதாப்பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது பேத்திக்கும் இந்த கொரோனா உறுதி செய்யப்பட்டு அனைவரும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் அமிதாப்பச்சன் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன், அதில் எனக்கு கொரணா தொற்றிருந்தது உறுதியாகி உள்ளது என்றும் கூறியிருந்தார். இவர் விரைவில் குணமடைந்து வரவேண்டும் என சக நடிகர்களும் அவரது ரசிகர்களும் பிரார்த்தனை செய்து கொள்வதாக சமூக வலைதள பக்கங்களில் ஆறுதல் கூறி வந்தனர். இதனிடையே இன்று அமிதாப்பச்சன் முழுவதுமாக குணமாகி வீடு திரும்பியுள்ளார் என்று செய்திகள் வெளியானது.இந்நிலையில் இது குறித்து அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.அதாவது இந்த செய்தி தவறானது, பொறுப்பற்றது, போலியானது என்று தெரிவித்துள்ளார்.
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…
கடலூர் : மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…