தமிழில் ரீமேக்காகும் அமிதாப் பச்சனின் “பிக்கு”.!தீபிகா படுகோனேவுக்கு பதிலாக திரிஷா.!

Published by
Ragi

அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோனே நடித்த பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் திரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா நடிப்பில் ராங்கி மற்றும் ஷுகர் ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.அதனையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும், மலையாளத்தில் மோகன்லாலுடன் ராம் படத்திலும் நடித்து வருகிறார் .

இந்த நிலையில் இவர் அடுத்ததாக ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்து வெற்றி பெற்ற “பிக்கு” படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . கடந்த 2015-ஆம் ஆண்டு அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, இர்பான் கான் உள்ளிட்ட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான “பிக்கு” படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை முன்னணி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் வாங்கியுள்ளதாகவும் ,இந்த படத்தில் தீபிகா படுகோனே நடித்த கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளதாகவும், முன்னணி நடிகர் ஒருவருடன் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அமிதாப் பச்சனின் “பிங்க்” திரைப்படம் தமிழில் நேர் கொண்ட பார்வை என்ற பெயரில் ரிமேக் செய்யப்பட்டு அதில் அஜித் நடித்தது குறிப்பிடத்தக்கது.எனவே இந்த படத்திலும் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் ஒருவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Ragi

Recent Posts

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

35 minutes ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

1 hour ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

1 hour ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

3 hours ago

காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரனும்! அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

4 hours ago

“இந்தி கட்டாயம் என்ற முடிவு வாபஸ்”…,மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவிப்பு!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு…

4 hours ago