தமிழில் ரீமேக்காகும் அமிதாப் பச்சனின் “பிக்கு”.!தீபிகா படுகோனேவுக்கு பதிலாக திரிஷா.!

Published by
Ragi

அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோனே நடித்த பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் திரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா நடிப்பில் ராங்கி மற்றும் ஷுகர் ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.அதனையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும், மலையாளத்தில் மோகன்லாலுடன் ராம் படத்திலும் நடித்து வருகிறார் .

இந்த நிலையில் இவர் அடுத்ததாக ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்து வெற்றி பெற்ற “பிக்கு” படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . கடந்த 2015-ஆம் ஆண்டு அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, இர்பான் கான் உள்ளிட்ட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான “பிக்கு” படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை முன்னணி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் வாங்கியுள்ளதாகவும் ,இந்த படத்தில் தீபிகா படுகோனே நடித்த கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளதாகவும், முன்னணி நடிகர் ஒருவருடன் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அமிதாப் பச்சனின் “பிங்க்” திரைப்படம் தமிழில் நேர் கொண்ட பார்வை என்ற பெயரில் ரிமேக் செய்யப்பட்டு அதில் அஜித் நடித்தது குறிப்பிடத்தக்கது.எனவே இந்த படத்திலும் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் ஒருவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Ragi

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago