வணிகம்

5000 ஆண்டு பழமையான திமிங்கல எலும்புக் கூடு தாய்லாந்தில் கண்டுபிடிப்பு.!

Published by
கெளதம்
தாய்லாந்தில் 3,000 முதல் 5,000 ஆண்டுகள் பழமையான 39 அடி திமிங்கலத்தின் எலும்புக்கூடை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கண்டுபிடித்த இந்த திமிங்கலம் பிரைடின் வகையை சேர்ந்தவை என்றும் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக் நகரின் மேற்கே உள்ள சாமுத் சாகோனில் கடற்கரையிலிருந்து 7.5 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

13-28 டன் எடை வரை வளரக்கூடிய பிரைடின் திமிங்கலங்கள் உலகளவில் வெப்பமண்டல மற்றும் வெப்பமான மிதமான கடல்களில் வாழ்கின்றன, அவை இன்றும் தாய்லாந்தைச் சுற்றியுள்ள நீரில் காணப்படுகின்றது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பாலூட்டி ஆராய்ச்சியாளர் மார்கஸ் சுவா பிபிசியிடம் பேட்டி அளிக்கையில், விதிவிலக்காக பாதுகாக்கப்பட்ட திமிங்கல எலும்புகள் ‘ஒரு அரிய கண்டுபிடிப்பு’ என்று கூறினார்.

Whale of a find

ஆராய்ச்சியாளர் மார்கஸ் சுவா கண்டுபிடிக்கப்பட்ட திமிங்கல எலும்புக்கூட்டின் படங்களை நாட்டின் முன்னாள் பிரதமரின் மகன் வரவுத் சில்பா-அர்ச்சா பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

இதுவரை 80 சதவீதத்துக்கு மேற்பட்ட எலும்புக் கூடு இதுவரை மீட்கப்பட்டுள்ளன. அதில், 10 அடி நீளமுள்ள ஒரு தலை, துடுப்புகள், விலா எலும்புகள், முதுகெலும்புகள் மற்றும் ஒரு தோள்பட்டை கத்தி ஆகியவை அடங்கும்.

ஒரு நிபுணர் இது குறித்து கூறுகையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பிரைட்டின் திமிங்கலங்கள் எவ்வாறு வாழ்ந்தன என்பதை நன்கு புரிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த கண்டுபிடிப்பு உதவும். மேலும், அவை கடந்த காலங்களில் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை வெளிப்படுத்துகின்றன.

இதற்கிடையில், திமிங்கலத்தின் எலும்புகள் திமிங்கலத்தின் வயதைப் பற்றிய மிகத் துல்லியமான மதிப்பீட்டை அடுத்த மாதம் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

9 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

10 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

10 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

11 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

11 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

12 hours ago