பாகற்காய் என்றாலே பலருக்கும் பிடிக்காது. அதில் காணப்படக்கூடிய கசப்பு தன்மை தான் இதற்கு காரணம். ஆனால் இந்த பாகற்காயை கசப்பு தன்மை குறைவாக வித்தியாசமான முறையில் ஆந்திரா ஸ்டைலில் செய்வது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
பாகற்காயை நன்றாக கழுவி வட்ட வட்டமாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பதாக ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள பாகற்காயை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். மற்றொரு சட்டியில் எள் மற்றும் சீரகத்தை பொன் நிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்பதாக இவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம், உளுந்து காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இவற்றுடன் வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளவும். இவற்றை நன்றாக வதக்கி மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து பாகற்காயை இவற்றுடன் சேர்த்து எண்ணெயில் நன்றாக வதங்க விடவும். அதன் பின் புளிக்கரைசல் கொஞ்சம் எடுத்துக் கொண்டு அதனுடன் சேர்த்து ஊற்றி கொதிக்க வைத்து இறக்கினால் அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் பாகற்காய் குழம்பு வீட்டிலேயே தயார்.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…