விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் மோகன்தாஸ் படத்தில் ஸ்டண்ட் கலைஞர்களான அன்பறிவ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால் காடன், எப்.ஐ.ஆர், ஜெகஜ்ஜால கில்லாடி மற்றும் மோகன்தாஸ் ஆகிய 4 படங்களை தனது கைவசம் வைத்துள்ளார் .இதில் காடன் மற்றும் எப்.ஐ.ஆர் ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது.அதிலும் ராணாவுடன் விஷ்ணு விஷால் நடித்துள்ள காடன் திரைப்படம் மார்ச் 26-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்கவிருக்கும் மோகன்தாஸ் படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளதாக சமீபத்தில் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.விஷ்ணு விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் மோகன்தாஸ் படத்தினை முரளி கார்த்திக் இயக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ள ஷரவந்தி சாய்நாத், இந்திரஜித் சுகுமாரன் ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.
கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் கடந்தாண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றதும் ,அதில் சைக்கோ கொலைகாரராக விஷ்ணு விஷால் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ள மோகன்தாஸ் படத்தில்
பிரபல ஸ்டண்ட் கலைஞர்களான அன்பறிவ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவர்கள் கேஜிஎஃப் உட்பட பல படங்களுக்கு ஸ்டண்ட் கலைஞர்களாக பணியாற்றி உள்ளதும் , சமீபத்தில் இவர்கள் தளபதி 65 படத்தில் பணியாற்ற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…