ஏசி அறையில் இருந்து வேலை பார்ப்பவரா நீங்கள்…? அப்ப கண்டிப்பா இதை படிங்க…!

Published by
லீனா

இன்றைய நவீன மயமான உலகில் பொதுவாக அதிகமானோர் ஏசி பொருத்தப்பட்ட அறைகளில் தான் வேலை செய்கிறோம். இது நமக்கு வியர்வை தொல்லை மற்றும் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய சில பிரச்சனைகளை தவிர்த்தாலும், நமது உடலில் பலவித பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் ஏசி அறையில் இருந்து வேலைபார்பவர்களுக்கு என்னென்ன பிரச்சனை ஏற்படுகிறது என்று பார்ப்போம்.

தலைவலி

நான்கு மணி நேரத்திற்கும் மேலாக ஏ.சி.யில் அமர்ந்திருப்பவர்கள் சைனஸ் மற்றும் தலைவலிக்கு ஆளாகிறார்கள். ஏசியின் வெப்பநிலை அதிகரித்தாலோ அல்லது குறைந்துவிட்டாலோ நீங்கள் தலைவலி மற்றும் எரிச்சலை உணரலாம்.

காய்ச்சல்

ஏ.சி.யில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதால் சோர்வு ஏற்படலாம். நீங்கள் ஏ.சி.யை விட்டுவிட்டு சாதாரண வெப்பநிலை அல்லது வெப்பமான இடத்திற்குச் சென்றால், நீங்கள் காய்ச்சலால் பாதிக்கப்படலாம். ஏ.சி.யில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதன் மூலம், காய்ச்சல், குளிர், சளி போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகலாம்.

கண் பிரச்சனை

ஏ.சி.யில் உட்கார்ந்திருப்பது கண்களில் வறட்சியை ஏற்படுத்துகிறது. இது கண்களில் அரிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், இது வெண்படல பிரச்சனையையும் ஏற்படுத்துகிறது. கண்கள் சிவத்தல், எரித்தல், நீர் வடிதல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்த கூடும்.

தோல் வறட்சி

ஏ.சி.யில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது சருமத்தில் வறட்சியை ஏற்படுத்துகிறது. இது சருமத்தின் ஈரப்பதத்தை முற்றிலுமாக  வற்றி போக பண்ணுகிறது.

உடல் எடை

ஏசியின் பயன்பாடு நம் உடலின் கொழுப்பை அதிகரிக்கிறது. இதன் பின்னணியில் உள்ள காரணம் என்னவென்றால், குளிர்ந்த இடத்தில் உட்கார்ந்து கொள்வதன் மூலம் நம் உடலின் ஆற்றல் தீர்ந்துவிடாது. இதன் காரணமாக உடலில் கொழுப்பு அதிகரிக்கத் தொடங்குகிறது இது உடல் பருமனை அதிகரிப்பதற்கான மிகப்பெரிய காரணமாக அமைகிறது.

Published by
லீனா
Tags: ac roomwork

Recent Posts

மதராஸி திரைப்படத்தின் முதல் பாடலான ”சலம்பல” ப்ரோமோ வெளியீடு.!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…

5 hours ago

“இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கினோம்” – ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பிரதமர் விளக்கம்.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…

5 hours ago

நாளை விண்ணில் பாயும் ”நிசார்” செயற்கைக்கோள்.! கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.!

ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…

6 hours ago

”இதற்குமேல் தாங்க முடியாது என பாகிஸ்தான் கெஞ்சியது” – பிரதமர் மோடி.!

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…

7 hours ago

அதிபர் டிரம்பிடம் இதையெல்லாம் கேட்க முடியுமா? – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்.!

டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…

7 hours ago

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.., வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…

8 hours ago