இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் AV31 படத்திற்கான டப்பிங் பணிகள் நேற்று தொடங்கியுள்ளது.
நடிகர் அருண் விஜய் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் தனது 31வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். All in Pictures சார்பில் தயாரிப்பாளர் ராகவேந்திரா தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் உறவு சம்மந்தமான திரில்லர் படமாக உருவாகியுள்ளது . இந்த திரைப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஸ்டெபி படேல் மற்றும் பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்திற்கான டப்பிங் வேலைகளை படக்குழு தொடங்கியுள்ளது. மேலும் நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது டப்பிங் பணியை தொடங்கியுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டைட்டில், டீஸர் ட, ரெய்லர் என விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…