உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு அனைத்து நாடுகளிலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ஈரானும் இருக்கின்றது. இங்கு 82,211 பேர் பாதிக்கப்பட்டு, 5,118 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிற நிலையில், அமெரிக்க பொருளாதார தடைகள் மற்றும் கொரோனா வைரசின் பரவலை எதிர்த்து போராடுவதற்கான தங்களது முயற்சிகளுக்கு பெரும் இடையூறாக இருப்பதாக ஈரான் அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இதையடுத்து வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது அதிபர் ட்ரம்ப் இதுகுறித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், ஈரான் மிகவும் வித்தியாசமான நாடு என்றும் ஆரம்பத்தில் அந்த நாடு முழு மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் கைப்பற்ற முயற்சி செய்தது. ஆனால் தற்போது அவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் உள்ளனர். அவர்கள் கொரோனா நோயால் அவதிப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், எனக்கு இது தேவையில்லை. எனினும் அவர்கள் விரும்பினால் உதவி செய்ய நான் முன்வருவேன் என்றும் அவர்களுக்கு வெண்டிலேட்டர்கள் தேவைப்பட்டால் என்னிடம் உதவி கேட்கலாம் என கூறினார். நான் அவர்களுக்கு வெண்டிலேட்டர்களை அனுப்புவேன். மேலும் எங்களிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெண்டிலேட்டர்கள் உள்ளன என்று கூறியுள்ளார். இதனிடையே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…