இன்று பூமியை கடந்து செல்லும் ஆபத்தான சிறுகோள்.
ஜூலை 24 அன்று, மணிக்கு 48,000 கிலோமீட்டர் வேகத்தில் 170 மீட்டர் நீளமுள்ள ஒரு சிறுகோள் பூமிக்கு மிக அருகாமையில் கடக்கும் என்று நாசா எச்சரிக்கை விடுத்திருந்தது. சிறுகோள் 2020 ND எனப்படும் ஒரு பெரிய அளவு சிறுகோள் பூமியிலிருந்து சுமார் 0.034 வானியல் அலகுகள், அதாவது, 5,086,328 கிலோமீட்டர் என்ற தொலைவில் பூமியை கடந்து செல்கிறது.
பூமிக்கு மிக மிக அருகாமையில் இந்த சிறுகோள் கடந்து செல்வதால் அபாயகரமான சிறுகோள்கள் பிரிவின் கீழ் இந்த சிறுகோள் சேர்க்கப்பட்டுள்ளது. 5,086,328 கிலோமீட்டர் என்பது வானியல் கணக்கின்படி பூமிக்கு மிக அருகிய தூரம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குறிப்பாக, 0.05 au அல்லது அதற்கும் குறைவான சுற்றுப்பாதை குறுக்குவெட்டு தூரம் (MOID) கொண்ட அனைத்து சிறுகோள்களும் PHA களாக கருதப்படுகின்றன. விண்கற்கள் PHA களாக வகைப்படுத்தப்பட்டாலும் அது பூமியை பாதிக்காது என்றும் நாசா தெரிவித்திருந்தது.
மேலும், இத்தகைய சிறுகோள்களை கண்காணிப்பதன் மூலமும், அவற்றின் சுற்றுப்பாதைகளை அவ்வப்போது புதுப்பிப்பதன் மூலமும், நெருக்கமான அணுகுமுறை புள்ளிவிவரங்களையும் அவற்றின் அச்சுறுத்தலையும் நாம் நன்கு கணிக்க முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…