ரம்யா கிருஷ்ணனின் வளைகாப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ரஜினியுடன் படையப்பா என்ற படத்தில் நீலாம்பரியாக நடித்து வில்லினா இப்படி தான் இருக்க வேண்டும் என்று காண்பித்தவர் ரம்யா கிருஷ்ணன். அதனையடுத்து தமிழ் , தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாகவும், வில்லியாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திரங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பாகுபலி இவரை இன்னும் பிரபலமாக்கியது என்றே கூறலாம். தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் தங்களது த்ரோபேக் புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ரம்யா கிருஷ்ணன் தனது வளைகாப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் ஒன்றில் தனது இரண்டு பெரியம்மாக்கள் வளையல் போடும் புகைப்படத்தை பகிர்ந்து , அவர்கள் தற்போது உயிருடன் இல்லை என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு புகைப்படத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியில் தனது அம்மாவே புகைப்படம் எடுக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகை ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு பட இயக்குநரான கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும், இவர்களுக்கு ஒரு மகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது வளைகாப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…