விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தானாக வெளியேறினார் போட்டியாளர் மதுமிதா. இதற்கான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை. பிக் பாஸ் வீட்டினுள் தற்கொலை முயற்சி செய்ததால் அவர் வெளியேற்றபட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் நேற்று, விஜய் டிவி சார்பில், மதுமிதா சம்பள பணத்தை தராவிட்டால் தற்கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மதுமிதா, ‘ எனக்கு கொடுக்க வேண்டிய வேண்டிய பணத்தினை கொடுத்து விடுவதாக விஜய் டிவி நிர்வாகம் ஏற்கனவே கூறிவிட்டது. இந்நிலையில் திடீரென எதற்காக என்மீது புகார் அளிக்கப்பட்டது என தெரியவில்லை.
இது குறித்து, விஜய் டிவியிடம் கேட்க, தொடர்பு கொண்டேன். ஆனால், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுவரை விஜய் டிவி நிபந்தனைக்கு உட்பட்டுதான் அனைத்தையும் செய்து வருகிறேன். அதற்க்குள் எதற்காக என்மீது புகார் அளித்தனர் என தெரியவில்லை.’ என தெரிவித்தார்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…