புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர்.!

Published by
Ragi

பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் தற்போது நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் தற்போது கே. ஜி. எஃப் 2 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட்டு மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு ஆக்ஸிஜன் இல்லாமையால் தான் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதனையடுத்து அவருக்கு செய்த கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியது குறிப்பிடத்தக்கது . அதனையடுத்து மருத்துவ கண்காணிப்பில் இருந்த சஞ்சய் தத் அடுத்த இரு தினங்களில் வீடு திரும்பினார். இந்த நிலையில் தற்போது இவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மூன்றாவது நிலையில் இருக்கும் இந்த புற்றுநோயை எதிர்த்து போராடுவதற்காக சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு செல்ல இருக்கிறாராம்.

இது குறித்து ட்வீட் செய்த பஞ்சாப் மந்திரியான ராணா குர்மித், என் நண்பருக்கு நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அறிந்து மனம் உடைந்ததாகவும், இதனை வெல்ல அவருக்கு வலிமை இருப்பது தனக்கு தெரியும் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் கிரிக்கெட் வீரரும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவருமான யுவராஜ் சிங் கூறுகையில், இது ஏற்படுத்தும் வலி தனக்கு தெரியும் என்றும், ஆனால் நீங்கள் மிகவும் வலிமையானவர் என்பதையும் நான் அறிவேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அவர் விரைவில் மீண்டு வர பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.

 

Published by
Ragi

Recent Posts

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

28 minutes ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

50 minutes ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

1 hour ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

3 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

4 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

4 hours ago