உள்நாட்டு இரு சக்கர வாகன மின்சார வாகன உற்பத்தியாளர் ரெவோல்ட் மோட்டார்ஸ் தனது பிரபலமான பைக் ஆர்.வி 400 ஐ மீண்டும் முன்பதிவுகளை செய்ய உள்ளது. இந்த மின்சார பைக்கின் இரண்டாவது தொகுதிக்கான முன்பதிவுகளை ஜூலை 15 முதல் நண்பகல் 12 மணிக்கு நிறுவனம் மீண்டும் திறக்க உள்ளது என கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து நிறுவனம் தற்போது வரை எந்த தகவலையும் வழங்கவில்லை.
கடந்த மாதத்தில், டெல்லி, மும்பை, புனே, சென்னை, அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் நகரங்களில் ஆர்.வி 400 மற்றும் ஆர்.வி 300 முன்பதிவு செய்யத் தொடங்கியது. அதிக தேவை காரணமாக முன்பதிவை மூட வேண்டியிருந்தது. இந்த நேரத்தில் ரூ.50 கோடி மதிப்புள்ள பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் கூறியிருந்தது.
விற்பனை மற்றும் சர்வீஸ் மையத்தை நாட்டின் 35 நகரங்களில் விரிவுபடுத்துவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிதாக முன்பதிவு செய்யப்பட்ட மின்சார பைக்கின் விநியோகங்கள் செப்டம்பர் 2021 இல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
RV300 1.5 கிலோவாட் மோட்டார் மற்றும் 2.7 கிலோவாட் பேட்டரி உள்ளது. இந்த மாடல் மணிக்கு அதிகபட்சம் 65 கி.மீ வேகத்தில் செல்லும். ரெவோல்ட் ஆர்.வி 300 எலக்ட்ரிக் பைக் ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 முதல் 150 கிலோமீட்டர் வரை இயங்கும். இந்த பைக்கில் சிபிஎஸ் பிரேக்குகள், முன்புறத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 180 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளன. இந்த பைக் ஸ்மோக்கி கிரே மற்றும் நியான் பிளாக் வண்ணங்களில் கிடைக்கிறது.
ஆர்.வி 400 எலக்ட்ரிக் பைக்கில் 3 கிலோவாட் மோட்டார் மற்றும் 3.24 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. ரெவோல்ட் ஆர்.வி 400 எலக்ட்ரிக் பைக் ஒருமுறை சார்ஜ் செய்தால் 156 கிலோமீட்டர் வரை இயங்கும். அதே நேரத்தில், மணிக்கு அதிகபட்சம் 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இது வழக்கமான 15 ஆம்ப் பிளக் பாயிண்டில் சார்ஜ் செய்யப்படலாம் மற்றும் சிறப்பு சார்ஜிங் உள்கட்டமைப்பு தேவையில்லை.
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…