இலங்கையில் எரிபொருள் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி பெட்ரோலியத்துறை நடவடிக்கை.
இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல இடங்களில் பொது சொத்துக்களை எரிக்க பெட்ரோல், டீசல் பயன்படுத்தப்படும் என்ற நிலையில், இதன் காரணமாக எரிபொருள் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி பெட்ரோலியத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த போராட்டத்தில் வன்முறைகள் வெடித்துள்ளது. இதனால், அரசியல் தலைவர்கள் வீடுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறையால் இலங்கையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே, இலங்கையில் போராட்டகாரர்களினால் அரசு அலுலகங்கள், வீடுகள் தீவைக்கப்பட்டு வந்த நிலையில், அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினால் சுட்டு தள்ளுமாறு முப்படையினருக்கும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. பல பகுதிகளில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து பொதுச் சொத்துகளைத் தாக்கி அழித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…