#BREAKING: எங்கள் கட்டுப்பாட்டிலேயே தலைநகர் கீவ் உள்ளது – உக்ரைன் அதிபர்

Published by
பாலா கலியமூர்த்தி

தலைநகர் கீவ் உக்ரைன் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு.

ரஷ்யா 3 நாட்களாக தாக்குதல் நடத்தி வந்தாலும் தலைநகர் கீவ் எங்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்டவே உக்ரைன் விரும்புவதாகவும் காணொலி வாயிலாக பேசிய அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார். கிட்டத்தட்ட உக்ரைன் மீது ரஷ்ய நடத்தி வரும் போரானது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஏனெனில் ரஷ்யா தற்போது உக்ரைன் தலைநகர் கீவ் மீது தான் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில் ரஷ்யாவிற்கு எதிராக போராடுவதற்கு உக்ரைன் பொதுமக்கள் தயாராக இருந்தால், யார் வேண்டுமானாலும் முன்வரலாம், அவர்களுக்கு ஆயுதங்களை கொடுக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக போராட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வழங்க தயாரா இருக்கிறோம். நாட்டிற்காக யாராவது போராட இருந்தால், அவர்கள் முன்வந்து ஆயுதங்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்,

இதனிடையே, ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் நிலையில், உக்ரைன் மக்கள் வெளியேறி வருகின்றனர். தலைநகர் கீவ் உள்ளிட்ட இடங்களில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், சுமார் 1 லட்சம் மக்கள் போலந்து நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றயுள்ள பகுதிகள் அனைத்தும் உக்ரைன் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

5 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

6 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

6 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

7 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

7 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

8 hours ago