#BREAKING: ரஷ்ய வீரர்கள் 9,116 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

உக்ரைன் மீது 9-வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் கடுமையான தாக்குதல் நடத்துகிறது. இதனால் ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்தப் போரில் மோசமான சூழ்நிலை இனிமேல்தான் ஏற்படப்போகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே ரஷ்ய அணு ஆயுத பிரிவை தயார் நிலையில் வைக்கும்படி அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் ராணுவ தலைமைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனால் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்கா நிகழ்த்திய குண்டு வெடிப்புக்கு அடுத்து உலகில் அணு ஆயுத போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்படும் எட்டாததால் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.

மறுபக்கம் உக்ரைனை சுற்றி வளைத்து அனைத்து பக்கத்தில் இருந்தும் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பதிலடி கொடும் விதமாக ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் படைகள் முடிந்தவரை போராடி வருகிறது. உக்ரைன் அதிபரும் ராணுவ படைகளுடன் சேர்ந்து நாட்டிற்காக போராடி வருகிறார். மிகப்பெரிய படைகளை வைத்துள்ள ரஷ்யாவை எதிர்கொள்ள ஐரோப்பிய நாடுகள் மற்றும் நேட்டோ அமைப்பை சேர்ந்த நாடுகள், உக்ரைனுக்கு ஆயுதங்கள், நிதி உதவி வழங்கி வருகிறது.

ரஷ்யா – உக்ரைன் இடையே போரால் உலக நாடுகள் மூன்றாம் உலக போரை எதிர்கொள்ள உள்ளது என்றும் அஞ்சப்படுகிறது. தொடர் தாக்குதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் உள்ளிட்ட பல்வேறு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ரஷ்யா வீரர்கள் 9,116 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. ரஷ்ய படைகளின் 251 டாங்கிகள், 33 போர் விமானம், 37 ஹெலிகாப்டர், 217 பீரங்கிகள், 939 பாதுகாப்பு கவச வாகனங்களை அழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

28 minutes ago

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன? நள்ளிரவு பயங்கரவாதிகளின் தூக்கம் துளைத்த தரமான சம்பவம்.!

காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…

2 hours ago

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

5 hours ago