visa [Imagesource : Representative]
இந்தியாவிலிருந்து இலங்கை செல்ல விசா வேண்டாம் என்று இலங்கை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்தை சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை ஒப்புதல் உடன் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை இந்த சோதனை முயற்சியை இலங்கை தொடங்கியுள்ளது. இதுகுறித்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இலவச விசாக்களை மார்ச் 31 ஆம் தேதி வரை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.’ என தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் இந்த அறிவிப்பால், மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இலங்கை செல்லும் பயணிகளுக்கு மிகவும் சந்தோசமான செய்தியாக இருக்கும். கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கிய நிலையில், தற்போது இலங்கை அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…
சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…
இங்கிலாந்து : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.…
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…