எச்சரிக்கை…”2050 ஆம் ஆண்டுக்குள் 500 கோடி மக்களுக்கு தண்ணீ்ர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்” – ஐ.நா..!

Published by
Edison

2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் 500 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்வார்கள் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.

உலகளாவிய நீர் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில்,தற்போது நடப்பு ஆண்டுக்கான நீர் மேலாண்மை,காலநிலை சேவைகள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து உலக வானிலை அமைப்பு (டபிள்யுஎம்ஓ) அறிக்கை வெளியி்ட்டுள்ளது.அந்த அறிக்கையில்,மேம்பட்ட நீர் மேலாண்மை, கண்காணிப்பு மற்றும் முன்னறிவிப்பு தேவை என்று ஐநா உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரித்துள்ளது.

மேலும்,இது தொடர்பாக உலக வானிலை அமைப்பு பொதுச்செயலாளர் பேராசிரியர் பெட்டெரி தலாக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலகளவில் காலநிலை மாற்றத்தால் வெள்ளம், வறட்சி மற்றும் நீர் தொடர்பான பிற ஆபத்துகள் எதிர்காலத்தில் அதிகரிக்கும்.அதே நேரத்தில் மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் கிடைக்கப்பெறும் குறைவான தண்ணீர் அளவின் மத்தியில் “நீர் அழுத்தத்தை” அனுபவிக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்த வகையில்,2018-ம் ஆண்டில் 360 கோடி மக்கள் ஆண்டுக்கு ஒரு மாதம் தண்ணீர் பற்றாக்குறையைச் சந்தித்த நிலையில், 2050-ம் ஆண்டுக்குள் 500 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறை சிக்கலை எதிர்கொள்வார்கள்.

அதிகரித்து வரும் வெப்பநிலை உலகளாவிய மற்றும் பருவ மழை மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது,இவை,விவசாய பருவங்களில் மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது.இதன்மூலம்உணவு பாதுகாப்பு மற்றும் மனித ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.மேலும்,கடந்த 20 வருடங்களாக,ஆண்டுக்கு ஒரு செ.மீ வீதம், மண்ணில் ஈரப்பதம் குறைதல், பனி உறைதல், நிலப்பரப்பில் நீர் குறைதல் போன்றவை ஏற்படுகின்றன.

இந்த பாதிப்பு அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்தில் பெரிய அளவில் ஏற்படுகிறது.இதனால்,இழப்பும் அதிகமாக உள்ளது.குறிப்பாக,அதிக மக்கள் தொகை கொண்ட தாழ்வான பகுதிகளில் வசிப்போர் தங்கள் பகுதிகளில் மிகப்பெரிய தண்ணீர் இழப்பை எதிர்கொண்டிருக்கிறார்கள்.இந்தப் பகுதிகளில் பாரம்பரியமாக நல்ல தண்ணீர் கிடைத்த நிலையில் தற்போது தட்டுப்பாடு நிலவுகிறது.

தண்ணீர் தொடர்பான பேரழிவுகள் 2000 ஆம் ஆண்டிலிருந்து அதிர்வெண்ணில் அதிகரித்துள்ளது.இதனால்,பெருவெள்ளம் தொடர்பான பேரழிவுகள் 134 சதவீதம் அதிகரித்துள்ளன. பெரும்பாலான பொருளாதார ரீதியான மற்றும் மனித உயிரிழப்புகள் ஆசியாவிலேயே நடந்துள்ளன.
அதேசமயம், வறட்சி, பஞ்சம் போன்றவை இதே காலகட்டத்தில் 29 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆப்பிரிக்காவில் வறட்சி,பஞ்சம் தொடர்பான சிக்கல்கள், பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. இந்த இரு கண்டங்களுக்கும் வலிமையான எச்சரிக்கை முறைகளை நிறுவுவது அவசியம்.

மேலும்,உலகளவில் தண்ணீர் பாதுகாப்பு, சேமிப்பு மோசமான நிலையில் இருக்கிறது. உண்மையக் கூறுவதென்றால், பூமியில் உள்ள தண்ணீரில் 0.5 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படாமலும், சுத்தமான நீராகவும் இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக தண்ணீரை அசுத்தப்படுத்துவது, அதானால் ஏற்படும் ஆபத்து அதிகரித்து வருகிறது.

எனவே,கூட்டுறவு நீர் மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றக் கொள்கைகளைக் கடைபிடித்தல் மற்றும் பேரிடர் அபாயக் குறைப்பு ஆகியவை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

14 minutes ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

17 minutes ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

1 hour ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

2 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

3 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

3 hours ago