“அமெரிக்க அதிபர் தேர்தலை தாமதப்படுத்தலாமா?” டிரம்பின் பதிவால் மக்களிடையே பரபரப்பு!

Published by
Surya

“அமெரிக்காவில் அதிபர் தேர்தலை தாமதப்படுத்தலாமா?” என அதிபர் டிரம்ப் கேள்வியெழுப்பிய நிலையில், அமெரிக்க மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிவருகிறது. அங்கு, கொரோனாவைப் பற்றி பேசுவதை விட, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களே அதிகளவில் உள்ளது. இதன்காரணமாக, அங்கு தேர்தல் பணிகள், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.

அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 100 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், மக்கள் முறையாக வாக்களிக்கும் வரை அதிபர் தேர்தலை தாமதப்படுத்தலாமா? என தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினார்.

அந்த பதிவில் அவர் தெரிவித்ததாவது, யுனிவர்சல் மெயில் மூலம் வாக்களிப்பு நடந்தால், 2020 வரலாற்றில் மிகவும் தவறான மற்றும் மோசடியான தேர்தலாக இது இருக்ககூடும். இது அமெரிக்காவிற்கு பெரும் சங்கடமாக இருக்குமென அந்த பதிவில் கூறினார்.

மேலும், மக்கள் முறையாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்கும் வரை தேர்தல்கள் தாமதப்படுத்தலாமா? என டிரம்ப் கேள்வி எழுப்பினார். அதிபர் ட்ரம்பின் இந்த பதிவால், அமெரிக்க மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அதிபர் டிரம்ப், இந்தாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக ஏற்கனவே குற்றம் சாற்றியது குறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

5 minutes ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

17 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

1 hour ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago