“அமெரிக்காவில் அதிபர் தேர்தலை தாமதப்படுத்தலாமா?” என அதிபர் டிரம்ப் கேள்வியெழுப்பிய நிலையில், அமெரிக்க மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிவருகிறது. அங்கு, கொரோனாவைப் பற்றி பேசுவதை விட, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களே அதிகளவில் உள்ளது. இதன்காரணமாக, அங்கு தேர்தல் பணிகள், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 100 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், மக்கள் முறையாக வாக்களிக்கும் வரை அதிபர் தேர்தலை தாமதப்படுத்தலாமா? என தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினார்.
அந்த பதிவில் அவர் தெரிவித்ததாவது, யுனிவர்சல் மெயில் மூலம் வாக்களிப்பு நடந்தால், 2020 வரலாற்றில் மிகவும் தவறான மற்றும் மோசடியான தேர்தலாக இது இருக்ககூடும். இது அமெரிக்காவிற்கு பெரும் சங்கடமாக இருக்குமென அந்த பதிவில் கூறினார்.
மேலும், மக்கள் முறையாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்கும் வரை தேர்தல்கள் தாமதப்படுத்தலாமா? என டிரம்ப் கேள்வி எழுப்பினார். அதிபர் ட்ரம்பின் இந்த பதிவால், அமெரிக்க மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அதிபர் டிரம்ப், இந்தாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக ஏற்கனவே குற்றம் சாற்றியது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…