“அமெரிக்காவில் அதிபர் தேர்தலை தாமதப்படுத்தலாமா?” என அதிபர் டிரம்ப் கேள்வியெழுப்பிய நிலையில், அமெரிக்க மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிவருகிறது. அங்கு, கொரோனாவைப் பற்றி பேசுவதை விட, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களே அதிகளவில் உள்ளது. இதன்காரணமாக, அங்கு தேர்தல் பணிகள், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 100 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், மக்கள் முறையாக வாக்களிக்கும் வரை அதிபர் தேர்தலை தாமதப்படுத்தலாமா? என தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினார்.
அந்த பதிவில் அவர் தெரிவித்ததாவது, யுனிவர்சல் மெயில் மூலம் வாக்களிப்பு நடந்தால், 2020 வரலாற்றில் மிகவும் தவறான மற்றும் மோசடியான தேர்தலாக இது இருக்ககூடும். இது அமெரிக்காவிற்கு பெரும் சங்கடமாக இருக்குமென அந்த பதிவில் கூறினார்.
மேலும், மக்கள் முறையாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்கும் வரை தேர்தல்கள் தாமதப்படுத்தலாமா? என டிரம்ப் கேள்வி எழுப்பினார். அதிபர் ட்ரம்பின் இந்த பதிவால், அமெரிக்க மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அதிபர் டிரம்ப், இந்தாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக ஏற்கனவே குற்றம் சாற்றியது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…