இங்கிலாந்து நாட்டில் மேற்கு யார்க்ஷயரின் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் அமர்ந்து இருந்த நபர் ஒருவர், காரை வாசனை மயமாக்கும் ஏர் ஃப்ரெஷ்னரை ஸ்பிரே செய்துள்ளார். பின்பு வழக்கமாக ஸ்பிரே செய்யும் அளவை விட மிக அதிகமாகவே ஏர் ஃப்ரெஷ்னரை பயன்படுத்தியுள்ளார். பின்னர் காரில் சாதரணமாக அமர்ந்து கொண்டு சிகெரெட் புகை பிடிக்க நினைத்திருக்கிறார். இதை அடுத்து சிகெரெட்டை எடுத்து வாயில் வைத்தபடியே, லைட்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது யாரும் எதிர்பாரா விதமாக காரினுள் தீப்பற்றி மிக பெரிய வெடி சத்தம் கேட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள், சாலையில் நடந்து சென்றவர்கள் என பலரும் பீதியடைந்தனர். இது குறித்து தகவல் தெரிவித்த சம்பவ இடத்தில் இருந்த ஒருவர், ஏதோ பெரிய வெடிகுண்டு வெடித்தது போன்றே காதை கிழிக்கும் அளவிற்கு சத்தம் கேட்டதாக குறிப்பிட்டார். காரின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அருகில் இருந்த சில கட்டிடங்கள் குலுங்கின என்றார். இவ்வளவு பெரிய விபத்தில் சிக்கியும் காரினுள் இருந்த அந்த நபர் பெரிய காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். எனினும் அவர் பயன்படுத்திய கார் இந்த சம்பவத்தில் பலத்த சேதமடைந்தது.
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…