சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் சந்திரமுகி. 2005-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. திகில், காமெடி கலந்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்து அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
தற்போது 15 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இந்த படத்தையும் பி.வாசு தான் இயக்க உள்ளார். நாயகனாக சூப்பர் ரஜினிகாந்திற்கு பதில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்காக தான் வாங்கிய முன்தொகை பணத்திலிருந்து 3 கோடி ரூபாயை கொரோனா நிவாரணத்திற்கு நிதியுதவியாக பிரித்து கொடுத்துள்ளார். இதனை தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், 50 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்காகவும், 50 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்காகவும் அளித்துள்ளார். 50 லட்சத்தை ஃபெப்சி சினிமா தொழிலாளர் சங்கத்திற்கும், 50 லட்சத்தை டான்ஸ் சங்கத்திற்கும், 75 லட்சத்தினை தினக்கூலி தொழிலாளர்களுக்கும் அளித்துள்ளார். 25 லட்சத்தினை மாற்றுத்திறனாளிகள் நலனுக்கும் பிரித்து கொடுத்துள்ளார் ராகவா லாரன்ஸ்.
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…