சார்பட்டா நான் நடிக்க வேண்டிய படம் என்று நடிகர் அட்டகத்தி தினேஷ் கூறியுள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷ்ரா விஜயன் நடித்திருந்தார். கலையரசன், பசுபதி, ஜான், ஷபீர் கல்லரக்கல் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விர்சனத்தை பெற்று ரசிகர்கள் மட்டுமின்றி, பல சினிமா பிரபலங்கள் படக்குழுவை பாராட்டினார்கள்.
இந்த நிலையில், நடிகர் தினேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சார்பட்டா படம் பற்றி சுவாரசிய விஷயங்களை பேசியுள்ளார். அதில் பேசிய அவர் “அட்டகத்தி படத்திற்கு பிறகு நான்தான் சார்பட்டா பண்ணவேண்டியது. மெட்ராஸ் படத்திற்கு முன்பே அதுக்குத்தான் நாங்க ரெடி ஆனோம். ஆனால் முடியவில்லை எனக்கும் பா.ரஞ்சித்திற்கும் இயற்கையாகவே அது அமையவில்லை. படம் வெளியான பிறகு நானே பன்னிருக்கலாமேன்னு தோணுச்சி. வருத்தம் எதுவும் இல்லை படம் வெளியானது மிகவும் எனக்கு சந்தோஷம் ” என்று தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…