அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனாவும் ஒன்று அந்நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது.இந்த நோய் காரணமாக சீனா கடும் உளைச்சலை சந்தித்து வருகிறது.அந்நாட்டில் இந்த வைரஸ் பாதிப்பால் 230 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில் அந்நாட்டில் இருக்கக்கூடிய பிறநாட்டைச் சேர்ந்தவர்களை மீட்க மற்ற நாடுகள் நடவடிக்கை எடுத்து வரும் அதே நிலையில் கடும் உச்சக்கட்ட பரிசோதனைகள் அவர்களுக்கு நடத்தப்படுகிறது..இன்னும் சில நாடுகள் சுற்றுப்பயணிகள் மற்றும் சீனர்கள் தங்கள் நாட்டிற்குள் வர தடைவித்துவிட்டனர்.இந்தியா தரப்பில் சீனாவில் சிக்கி இருப்பவர்களை மீட்டு வருகிறது.
இந்நிலையில் உச்சக்கட்ட பரபரப்பாக காணப்படும் நிலையில் சீனாவில் இந்நோய் அதிக பகுதிகளில் வேகமாக பரவி வருகின்றது இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அந்நாட்டு அரசு மருத்துவமனை ஒன்றை கட்ட திட்டமிட்டது.அதன்படி மருத்துமனையையும் கட்டிமுடித்து விட்டதாக சீன செய்தி நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு கட்டி முடிக்கப்பட்ட இந்த மருத்துவமனையில் 1000 படுக்கை வசதிகளை கொண்டது.மேலும் 1400 ராணுவ மருத்துவ அதிகாரிகளை இம்மருத்துவமனைக்கு அனுப்ப சீன அரசு உத்தரவிட்டது.
இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆகியுள்ளது.இந்த வீடியோவில் ஜன.,29,30,31 ஆகிய மூன்று நாட்களில் அசுர வேகத்தில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட மாற்றத்தை காணமுடிகிறது.இவ்வாறு விறுவிறுப்பாக கட்டப்பட்ட இம்மருத்துவமனையானது நாளை முதல் செயல்பாட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மற்றொரு வீடியோவில் மிக விரைவாக மருத்துவமனையின் கட்டிப்பணிகள் நடைபெறுவதைக் காணலாம்.
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…