சீனாவில் ரசாயன நிறுவனத்தில் நச்சு வாயு வெளியேற்றம்…8 பேர் உயிரிழப்பு….

Published by
Hema

சீனாவில் உள்ள ரசாயன நிறுவனத்தில் நச்சு வாயுவை சுவாசித்ததில் 8 பேர் இறந்தனர், 3 பேர் நோய்வாய்ப்பட்டனர்.

தென் சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் நேற்று ரசாயன நிறுவனத்தில் நச்சு வாயு கசிந்ததையடுத்து, அதை சுவாசித்தவர்களில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் நோய்வாய்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மாகாண தலைநகர் குயாங்கில் உள்ள காவல்துறையினருக்கு அதிகாலையில் ஒரு ரசாயன நிறுவனத்தின் அருகே சிலர் மயக்கத்தில் கிடந்ததாக தகவல் கிடைத்ததாக அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், நிறுவன ஊழியர்கள் ரசாயனங்களை இறக்குகையில் வேனில் இருந்து மீதைல் ஃபார்மேட் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எட்டு பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Published by
Hema

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

3 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

4 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

4 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

5 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

5 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

5 hours ago