எல்லையில் 60,000 வீரர்களை சீனா குவிப்பு .. மைக் பாம்பியோ..!

Published by
murugan

இந்திய எல்லையில் 60000 வீரர்களை சீனா நிறுத்தியுள்ளதாக  அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பாம்பியோ டோக்கியோவிலிருந்து திரும்பி வந்துள்ளார். அங்கு அவர் இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் குவாட் குழு  கூட்டத்தில் கலந்துகொண்டார். அதன் பின்னர் பேசிய மைக் பாம்பியோ, இந்தியாவின் வடக்கு எல்லையில் 60000 வீரர்களை சீனா நிறுத்தியுள்ளது  என தெரிவித்தார்.

குவாட் குழுவில் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன. குவாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கடந்த செவ்வாய் அன்று டோக்கியோவில் சந்தித்தனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கிய பின்னர் இவர்கள் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும.

கிழக்கு லடாக்கில் பல மாதங்களாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் 15 அன்று கால்வன் பள்ளத்தாக்கில் நடந்த மோதல்களுக்குப் பிறகு, பதட்டங்கள் நிறைய அதிகரித்துள்ளன. இந்த மோதலில், இந்தியாவின் 20 வீரர்கள் உயிரிழந்தனர்.  இந்த மோதலில் சீனத் தரப்பைச் சேர்ந்த வீரர்கள் உயிரிழந்ததாகவும் செய்திகள் வந்தன, ஆனால் இதுவரை எவ்வளவு வீரர்கள் உயிரிழந்தார்கள் என்ற விவரத்தை சீனா வெளியிடவில்லை.

இந்த மோதலுக்கு தீர்வு காண இரு தரப்பிலும் பல முறை இராணுவ மட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன, ஆனால் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

56 minutes ago

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

1 hour ago

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…

2 hours ago

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

12 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

13 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

13 hours ago