கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்ட சீனா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது.
கடந்த டிசம்பர் மாதம் சீன உஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அந்நாட்டை ஆட்டிப்படைத்து. கொரோனாவால் பாதிப்பு, உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதன் காரணமாக போதுமான மருத்துவ படுக்கைகள் இல்லாததால் 10 நாட்களில் மிக பெரிய மருத்துவமனையை கட்டி சாதனை படைத்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சுமார் 70 நாட்கள் சீனா முழுவதும் முடக்கப்பட்டது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் சற்று குறைந்தன. சீனாவில் இதுவரை உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,632 ஆகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,692 ஆகவும் உள்ளது.
இந்நிலையில் சீனாவில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு, பின்னர் மூடப்பட்டிருந்த சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் 84 சதவீதத்திற்கு மேல் தற்போது திறக்கப்பட்டுள்ளது. அவற்றில் உற்பத்தி விரைவில் தொடங்கும் என்று அந்நாட்டு அதிகாரிகள் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளனர். இதனால் அந்நாட்டு மக்களின் இயல்வு வாழ்க்கை வழக்கம்போல் தொடங்கி உள்ளது.
சென்னை : இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி, 3,961 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப…
சென்னை : நேற்றைய தினம் மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்றது. அதற்கு முன் தினமே…
சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி,…