இந்தியாவை கேலி செய்து ட்வீட்டரில் பதிவிட்ட சீனா…!

Published by
லீனா

இந்தியாவில் தொற்றால் இறப்பவர்களின் சடலங்களை எரியூட்டும் புகைப்படத்தை பதிவிட்டு கேலி செய்த சீனா.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் பரவி வரும் நிலையில், இந்த வைரஸை  கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதையடுத்து, இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் பண்ணுவதற்கு கூட இடம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்தியாவில் சடலங்களை தகனம் செய்யும் புகைப்படத்துடன் ஒப்பிட்டு, சீனா ஒரு தீ வைப்பதை எதிர்த்து இந்தியா ஒரு தீ வைக்கும் என்ற தலைப்பில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், சிறிது நேரத்தில் இந்த இடுகை அகற்றப்பட்டது. இதற்கு சீன சமூக ஊடக பயனர்கள் இந்த இடுகையை பார்த்து அவர்களது அதிர்ச்சியையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளன.

இதுகுறித்து சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், சீன அரசாங்கம் கொரோனா தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை ஆதரிக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தது. மேலும் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அலுவலகம், இந்தியாவின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, சீனாவின் ஆதரவை காட்டும். எதிர்வரும் நாட்களில் இந்தியாவிற்கு மேலும் பொருள்கள் தொடர்ந்து அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை ஆசிரியர் ஹு ஜிஜின்கூறுகையில், இந்த நேரத்தில் மனிதாபிமானத்தின் பதாகை உயர்த்தப்பட வேண்டும். இந்தியாவுக்கு அனுதாபம் காட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

42 minutes ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

47 minutes ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

1 hour ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

3 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

3 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

4 hours ago