கொரோனா தாக்கத்திற்கு பின் 3 மாதத்தில் மீண்டெந்த சீன பொருளாதாரம்.!

Published by
murugan

உலகம் முழுவதும் பேசப்படும் ஒன்றாக இருப்பது என்னவென்றால் அது கொரோனா வைரஸ் தான் , இந்த கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. அதிலும், கொரோனா வைரஸ் வல்லரசு நாடுகள் எனக் கூறப்படும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் அதிகமாக பாதித்துள்ளது. மேலும், பொருளாதாரமும் இங்கு அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பொருளாதர பாதிப்பு  வல்லரசு நாடுகளை மட்டும் பாதிக்கவில்லை அனைத்து நாடுகளிலும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாட்டின் முதுகெலும்பு என்றால் அது பொருளாதாரம், அப்படி இருக்கையில், இந்த கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்து நாடுகளிலும் பொருளாதாரம் பெரிதாக பாதித்துள்ளது.

ஆனால், கொரோனாவின் பிறப்பிடமாக கூறப்படும், சீனா தற்போது  மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு உள்ளது. இது ஒருபுறம் இருக்க மற்றோரு புறம் சீனா அனைத்துத் துறைகளிலும் வர்த்தகம் சிறப்பாக நடந்து வருவதால் பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டுள்ளது.

உலக பொருளாதார நாடுகளில் ஒன்றாக விளங்கும் சீனா கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தி இயல்பு நிலைக்கு  திரும்பி வருகிறது. சீனாவில் கடந்த சில மாதமாக தொழிற்சாலைகள் மற்றும் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு 90 சதவீதம் இயங்கி வருவதால், ஜூன் மாதத்தில் சீனாவின் பொருளாதாரம் 3.2 சதவீதம் வரை  உயர்ந்துள்ளது.

ஆனால், மார்ச் மாதத்தில் சீனாவின் பொருளாதார சதவீதம் -6.8 இருந்தது. கடந்த 3 மாதத்தில் 3.8 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் சீனா பதிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள 3 மாதத்திலே பொருளாதார வளர்ச்சியை கண்ட சீனா அடுத்த சில மாதங்களில்  முழுமையான வளர்ச்சியை அடையும் என கூறப்படுகிறது.

சீனாவில், கொரோனா பாதிப்பு கடந்த நவம்பர் மாதம்  இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டதால் அங்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இதனால், டிசம்பர் மாதம் சீனாவின் அனைத்து தொழில்களும் முழுவதும் முடங்கியது. சீனா விதித்த கடும் கட்டுப்பாடு காரணமாக தான் அங்கு பிப்ரவரி மாதம் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.

பின்னர், மார்ச் மாத இறுதியில் வர்த்தக மற்றும் உற்பத்தி சந்தை  துவங்க தொடங்கியது. ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை பொறுத்தே உள்ளது. ஆனால், சமீபகாலமாக சீனா மீது அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

சீனாவின் பொருளாதாரம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை நம்பி இருப்பதால் உலக நாடுகள் வர்த்தக எல்லையை திறந்ததால் தான்  சீன வர்த்தகச் சந்தையில் மீண்டும் முழுமையாக எழுந்து வரும். சமீபத்தில், சீனாவின் தலைநகரப் பெய்ஜிங்கில் 2-வது கொரோனா பாதிப்பு அலையை சீன மிக வேகமாகக் கட்டுப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
murugan

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

6 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

6 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

7 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

7 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

9 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

9 hours ago