மாதுளையின் மகத்தான மருத்துவ குணங்கள் அறியலாம் வாருங்கள்!

Published by
Rebekal

இயற்கையில் நமக்கு வரமாக கிடைத்துள்ள பழங்கள் நமது உடலிலுள்ள நோய்கள் மற்று தேவையற்ற கிருமிகளை அழிக்கக்கூடிய குணநலன்கள் நிறைந்துள்ளது. அதிலும் மாதுளம்பழத்தில் உள்ள மிகச்சிறந்த சத்துக்கள் சிலவற்றை பார்க்கலாம் வாருங்கள்.

மாதுளையின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்

மாதுளம் பழத்தில் பழம் மட்டுமல்லாமல் அதன் பூ, பட்டை ஆகிய அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது தான். மாதுளை பழத்தில் இரும்பு சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புகள் மற்றும் பல்வேறு உயிர் சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த மாதுளம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், ரத்த அளவும் அதிகரிக்கும். இந்தப் பlழத்தில் காணப்படக்கூடிய அதிக அண்டிஆக்சிடன்ட்ஸ் காரணமாக உடலில் ஏற்படக்கூடிய புற்றுநோய் செல்கள் ஆன பிரீரேடிகல் செல்களை அழிக்க இது உதவுகிறது. மேலும் உடலில் உள்ள செல்கள் சிதைவுறாமல் பாதுகாக்கவும் இது பயன்படுகிறது.

மாதுளம் பழத்தை அதிக அளவில் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பது மிகவும் நல்லது. ஏனென்றால், இந்த பழத்தில் அதிக அளவு நினைவாற்றல் மற்றும் கற்கும் திறனை கொடுக்கக் கூடிய சக்தி உள்ளது. குடல் வீக்கங்கள் செரிமான கோளாறுகளை போக்குவதுடன் இதனால் குடலில் உள்ள புண் மற்றும் வயிற்று புண்ணாகி ஆறும். உடலின் ஆக்சிஜனேற்ற அழுத்தங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் திசுக்கள் சிதைவுராமல் பாதுகாக்கிறது. மேலும் ரத்த அழுத்தம் குறைக்க இந்த மாதுளம் பழம் மிகவும் பயன்படுகிறது. இதயம் சார்ந்த பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது, கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மார்பகப் புற்றுநோய் வராமலும் காக்கிறது, உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் இந்த பழத்தை தங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

மாதுளையில் உள்ள விதைகள் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதுடன் இதில் உள்ள பாலிபீனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் சர்க்கரையினால் ஏற்படக்கூடிய உடல் எடை இதில் உள்ள சர்க்கரையினால் ஏற்படாது. ஏனென்றால் இதில் உடலில் கலோரிகளை அதிகரிக்கச் செய்யாது. மேலும் கர்ப்பிணிகள் மாதுளம் பழத்தை தொடர்ந்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இதிலுள்ள விட்டமின் ஏ சி ஈ மற்றும் போலேட் ஆகிய சத்துக்கள் காரணமாக கர்ப்பிணிகளின் உடலில் இரும்பு சத்து அதிகரிக்க இது உதவுகிறது.

குழந்தைக்கு தேவையான ரத்த உற்பத்திக்கும் துணைபுரிகிறது. மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய உயர் ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த இது உதவுகிறது. நஞ்சு கொடி சார்ந்த பிரச்சினை மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் ஆகியவற்றையும் தடுக்க உதவுகிறது. இரத்த சோகை நோய் ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது. இந்த பழத்தில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து காரணமாக செரிமானம் நன்முறையில் நடைபெற உதவும். மலச்சிக்கலைத் தடுக்கும் மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய தசைபிடிப்பு நீங்க உதவுவதுடன் இதில் உள்ள போலிக் சத்தால் கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் நரம்பு வளர்ச்சி நன்முறையில் இருக்கும்.

Published by
Rebekal

Recent Posts

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

14 minutes ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

1 hour ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

2 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

2 hours ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

3 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

5 hours ago