அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோமெலைன் என்னும் பொருள் மூட்டுகளில் ஏற்படக்கூடிய தேய்மானம் மற்றும் வலியினை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்குகிறது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை கொடுப்பதுடன் இப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையால் நோயெதிர்ப்பு மண்டலத்தை முழுவதுமாக வலுவடைய செய்கிறது. மேலும் இதிலுள்ள வைட்டமின்-சி காரணமாக காயங்கள் விரைவில் ஆற துணை செய்கிறது. இப்பழத்தில் அதிகப்படியான கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளதால் எலும்புகளின் வலிமையை அதிகரித்து, நல்ல ரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது.
அன்னாசிப்பழம் நார்ச்சத்து நிறைந்தது என்பது நாம் அனைவரும் அறிந்தது. எனவே மலச்சிக்கல் ஏற்படாமல் தடுத்து, நம் ஜீரண மண்டலத்தை வலிமைப்படுத்தி குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் நிச்சயம் அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிடலாம். தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைத்து இருதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பொட்டாசியம் அதிகம் இந்த பழத்தில் இருப்பதால் இப்பழத்தை உண்டு வருபவர்களுக்கு ரத்த அழுத்தம் எப்பொழுதும் கட்டுக்குள் இருக்கும். மேலும் ரத்த அழுத்தத்தினால் நோய்வாய்ப்பட்டு உள்ளவர்கள் விரைவில் குணமடையலாம். வைட்டமின் ஏ சத்து இதில் நிறைந்துள்ளதால் கண்பார்வை குறைபாடு நீங்கி ,மாலைக்கண் மற்றும் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் அனைத்தும் குணமடைய அன்னாசி பழம் உதவுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…