இஸ்ரேலர்களுக்கு காசா முனையில் உள்ள ஹமாஸ் படையினருக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 109 ஹாமஸ் படையினரும் 7 இஸ்ரேலர்களும் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கு இடையே கடந்த பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், காசா முனையை ஆட்சி செய்து வரக்கூடிய ஹமாஸ் போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதி வருகிறது. இந்த ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலர்களுக்கும் இடையே அடிக்கடி வான்வழி தாக்குதல் மூலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை அல்- அக்ஷா மத வழிபாட்டுத் தலத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.
இதனையடுத்து இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது காசா முனையிலிருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலியர்கள் பதிலடி தாக்குதல் நடத்தினர். இவ்வாறு இருவரும் மோதிக் கொண்டதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்ததுடன், பலர் உயிரிழக்கவும் செய்தனர். இவ்வாறு இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த இரு தரப்பு மோதலில் இதுவரை மொத்தம் 116 பேர் உயிரிழந்துள்ளனராம். காஸாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்த 106 பேரும், இஸ்ரேலில் உள்ள ஏழு பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…