சினிமாவில் என்டரி கொடுக்கும் ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி… அதுவும் SK படத்தில்…!

Published by
Ragi

சிவகார்த்திகேயனின் டான் படத்தில் குக் வித் கோமாளி பிரபலமான ஷிவாங்கி,ஆர்ஜே விஜய் ஆகியோர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் மற்றும் அயலான் . இதில் டாக்டர் திரைப்படம் மார்ச் மாதம் 26 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தனர். அயலான் திரைப்படம் வருகின்ற கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் அட்லியின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் ‘டான்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.அந்த படத்திற்கும் அனிருத் இசையமைப்பதாகவும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஒரு வீடியோவும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பு கிடைத்தது.

கல்லூரி பின்னணியில் உருவாகும் டான் படத்தில் நடிகரும், இயக்குனருமான எஸ்ஜே சூர்யா மற்றும் நடிகை பிரியங்கா அருள் மோகன், நடிகர் சூரி, நடிகர் சமுத்திரக்கனி, ஆகியோர் நடிக்கவுள்ளனர்.நாளை பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது டான் படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதாவது டான் படத்தில் முதலாவதாக மூன்று காமெடி நடிகர்களான முனீஷ்காந்த்,காளி வெங்கட் மற்றும் பாலா ஆகியோர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனின் டான் படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஷிவாங்கி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது அவரது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் சிவகார்த்திகேயன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சென்ற போது ஷிவாங்கியை போல தங்கச்சி இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .ஷிவாங்கியை தவிர பிரபல தொகுப்பாளரான ஆர்ஜே விஜய்யும் டான் படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பால் டான் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

Published by
Ragi

Recent Posts

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

28 minutes ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

1 hour ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

1 hour ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

3 hours ago

காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரனும்! அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

4 hours ago

“இந்தி கட்டாயம் என்ற முடிவு வாபஸ்”…,மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவிப்பு!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு…

4 hours ago