இரண்டு வருடத்திற்குள் கொரோனா முடிவுக்கு வரலாம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸ் பாதிப்பால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது.
இந்நிலையில், இந்த வைரஸை தடுக்க, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. ரஷ்யாவில் ஏற்கனவே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் புனேயில் உள்ள செரம் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், பாரத் பயோடெக், சைடஸ் காடிலா ஆகிய இரண்டு நிறுவனங்களும் முதல்கட்ட சோதனையை முடித்து இரண்டாம் கட்ட சோதனைக்கு முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கூறுகையில், இரண்டு வருடத்திற்குள் கொரோனா முடிவுக்கு வரலாம் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 1918-ம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல் பரவிய போது, இரண்டு வருடத்திற்கு பிறகு முடிவுக்கு வந்தது. இப்பொது பிரச்னை என்னவென்றால், அதிக தொழில்நுட்பம் வைரஸ் அதிக அளவில் பரவ வழிவகுக்கிறது. அதே நேரம், அந்த தொழில்நுட்பம், கொரோனா பரவலை தடுக்கவும் உதவும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…