வைரஸ் தாக்கத்தால் நேற்று மட்டும், அமெரிக்காவில், 2,528 பேர் உயிரிழந்துள்ளனர்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கியுள்ளது. இந்த வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த வைரஸை அழிக்க உலகநாடுகள் தீவிரமாக மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதுவரை இதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்த கொரோனா வைரஸால் உலக அளவில் இதுவரை 3,822,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 265,076 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில், உலக அளவில் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருப்பது வல்லரசு நாடான அமெரிக்கா தான்.
இந்நிலையில், அமெரிக்காவில் இதுவரை 1,263,092 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 74,799 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கத்திற்கு நேற்று மட்டும், அமெரிக்காவில், 2,528 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்குநாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை, அங்குள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…