உலகளவில் இதுவரை இல்லாத அளவாக, கடந்த 100 மணிநேரத்தில் மட்டும் 10 லட்ச பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை 1.44 கோடி பேர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் பல உலகாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், உலகளவில் இதுவரை இல்லாத அளவாக, கடந்த 100 மணிநேரத்தில் மட்டும் 1 மில்லியன் (10 லட்சம்) பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நாளில் இருந்து 3 மாதங்களுக்கு பிறகுதான் 10 லட்சம் பாதிப்புகளை எட்டுவதற்கு கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆனதாகவும், 100 மணிநேரத்தில் 1 மில்லியன் தொற்று இதுவே முதல்முறை என சுகாதாரத்துறை அதிகாரிகளும், மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.4 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது ஜூலை 13 ஆம் தேதி 1.3 கோடியாக இருந்த இந்த கொரோனா பாதிப்பு, தற்பொழுது வெறும் 100 மணிநேரத்தில் (ஏறத்தாழ 4 நாட்கள்) 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக, அமெரிக்காவில் மட்டும் 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைதொடர்ந்து, பிரேசிலில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…