இந்தியாவில் கொரோனா நெருக்கடியை சமாளிக்க நாட்டிற்கு உதவுவதற்காக பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆக்ஸிஜன் சுவாச உபகரணங்களை, இந்தியாவுக்கு அனுப்புவதாக பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோனி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மூன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போர் ஒரு பக்கமிருக்க, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் செய்தி வேதனையை அளிப்பதாக உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா நெருக்கடியை சமாளிக்க நாட்டிற்கு உதவுவதற்காக பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆக்ஸிஜன் சுவாச உபகரணங்களை, இந்தியாவுக்கு அனுப்புவதாக பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோனி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஞாயிற்றுக்கிழமை ஐரோப்பிய ஆணையம், கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன், மருந்துகள் ஆகியவற்றை, இந்தியாவிற்கு வழங்கி உதவுவதற்காக உறுப்பு நாடுகளை, ஐரோப்பிய நாடுகளின் அவசர மேலாண்மை ஒருங்கிணைப்பு மையம் ஒருங்கிணைத்து வருகிறது என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…