56 நாட்கள் கழித்துக் பெய்ஜிங்கில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பெய்ஜிங்கில் சில பகுதிகளில் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், தற்பொழுது உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கபட்டு வருகின்றனர். மேலும், இந்த வைரஸின் தாக்கத்தை சீனா கட்டுப்படுத்தியுள்ளது. அதைதொடர்ந்து, நியூஸிலாந்தும் தற்பொழுது கொரோனா இல்லா நாடாக மாறியுள்ளது.
56 நாட்கள் கழித்துக் கடந்த வியாழக்கிழமை அன்று பெய்ஜிங்கில் கொரோனா தொற்று மீண்டும் பதிவானது. இந்நிலையில் சீனா, பெய்ஜிங்கில் உள்ள சின்ஃபடி இறைச்சி கடை தொடர்புடையவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சீனாவில் ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில், 6 பேர் உள்ளூர் மக்கள் என்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதன்காரணமாக பெய்ஜிங்கில் சில பகுதிகளில் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் மொத்தமாக 83,075 கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது. இதில் 74 நோயாளிகள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனறும் யாரும் கடுமையான நிலையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.கொரோனாவிலிருந்து மீண்டு 78,367 பேர் வீடு திரும்பினர். மேலும் இதுவரை 4,634 பேர் கொரோனாவால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…