இந்த 5 நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு அதிகம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் அதிகபட்சமாக இந்த 5 நாடுகளில் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகம்.

உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், கொரோனாவின் பாதிப்பும், உயிரிழப்புகளும் தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில், உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42,56,022 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 287,332 ஆகவும் உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து 15,27,517 பேர் குணமடைந்துள்ளார்கள். மேலும் சிகிச்சை பெறுபவர்களில் 46,936 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தற்போது வரை கொரோனா வார்டில் 24,41,173 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் அதிகபட்சமாக 13 லட்சத்து 85 ஆயிரத்து 834 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். அங்கு பலி எண்ணிக்கை 81, ஆயிரத்து 795 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 26,744 ஆக அதிகரித்துள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,68,143 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,77,846 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 32,065 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,23,060 ஆக உயர்ந்துள்ளது. ரஷியாவில் 2,21,344 பாதிக்கப்பட்டு, 2,009 பேர் பலியாகியுள்ளனர். இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 30,739 ஆகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 219,814 ஆகவும் உயர்ந்துள்ளது. எனவே, உலகிலேயே கொரோனாவால் வைரஸ் இந்த 5 நாடுகளில் தான் அதிகம் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

2 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

2 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

3 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

3 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

5 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

6 hours ago