தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசாவிற்கு நேற்று உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது சிரில் ராமபோசா சுயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் மற்றும் தென்னாப்பிரிக்க இராணுவ சுகாதார சேவையால் கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரத்துக்கான அனைத்துப் பொறுப்புகளையும் துணை ஜனாதிபதி டேவிட் மபுசாவிடம் ஒப்படைத்துள்ளார். 69 வயதான ரமபோசா முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளார். அவர் ஓமிக்ரான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று அந்த அறிக்கையில் கூறப்படவில்லை. கடந்த வாரம், ரமபோசா நான்கு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்றார்.
பயணத்தின் போது ஒவ்வொரு நாட்டிலும் அவரும் அவரது பிரதிநிதிகள் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கொரோனா பரிசோதனை செய்தனர். அப்போது தூதுக்குழுவில் உள்ள சிலர் நைஜீரியாவில் கொரோனா பாசிட்டிவ் வந்தவுடன் நேரடியாக தென்னாப்பிரிக்காவிற்கு திரும்பினர். மீதமுள்ள பயணத்தில், ரமபோசா மற்றும் அவரது பிரதிநிதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது நெகட்டிவ் வந்துள்ளது.
கடந்த டிசம்பர் 8 அன்று செனகலில் இருந்து தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…