விஜய்யின் தமிழன் படத்தை இயக்கிய மஜித் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், அவரின் சிகிச்சைக்காக கே. ஜி. ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் பணம் செலுத்தி உதவியதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று சென்னை உள்ளிட்ட சில இடங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி இரவு 12 மணிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டது மட்டுமில்லாமல் சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2002ல் விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ என்ற படத்தை இயக்கியவர் மஜித். தற்போது இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தனது சிகிச்சைக்கான பணத்தை மருத்துவமனையில் கட்ட முடியாமல் அவதி பட்டதால் திரையுலகை சேர்ந்த பலரிடம் உதவி கேட்டுள்ளார். அப்போது பிரபல தயாரிப்பு நிறுவனமான கே. ஜி. ஆர் ஸ்டுடியோஸ் உரிமையாளரான ராஜேஷ் மஜித் அவர்களுக்கு சிகிச்சைக்கான பணத்தை செலுத்தி உதவியுள்ளார். இந்த கே. ஜி ஆர் ஸ்டுடியோஸ் தான் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…