அமெரிக்க தேர்தலுக்கு முன் கொரோனா தடுப்பூசி தயாராக வாய்ப்பில்லை – மாடர்னா நிறுவனம்

Published by
லீனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 7,451,354 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 211,805 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்,  அமெரிக்காவை சேர்ந்த பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா கொரோனாவிற்கான தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.  கொரோனா தடுப்பூசி குறித்து இந்த நிறுவனம் கூறுகையில்,  நவம்பர் 25 க்கு முன் தடுப்பூசி அங்கீகாரத்தை பெறுவதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது.

அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க தேர்தலுக்கு முன்பு  தடுப்பூசி தயாராகும் என்று வெளியிட்டுள்ள அறிக்கையை இந்த தகவலானது கேள்விக்குறியாக்கி உள்ளது. இது குறித்து நிறுவனத்தின் இயக்குனர் ஸ்டீபன் பான்சல் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் நவம்பர் 25 க்கு முன்பு தடுப்பூசி மாதிரி சோதனை முடிவுகளின் தரவுகள் பெறப்பட்டு, உணவு மற்றும் மருந்து துறைக்கு அனுப்பப்படும் என்றும், தடுப்பூசி பாதுகாப்பு தரவுகள் நல்ல முறையில் வந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், நவம்பர் 1-ம் தேதிக்குள் நல்ல முடிவுகள் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ள நிலையில் அதிகாரபூர்வமான தடுப்பூசியை கொண்டுவர போதுமான தரவுகள் எடுக்கப்படாததால் தான் இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும், தேர்தல் நாளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும், எங்கள் செயல் முறையின் படி போதுமான தரவுகள் கிடைத்து விட்டால் தேர்தலுக்கு முன்பே கூட தடுப்பூசி நடைமுறைக்கு வரலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

9 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

9 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

10 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

10 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

13 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

14 hours ago