கொரோனாவின் கோர முகம் – உலகளவில் உயிரிழப்பு தெரியுமா.?

Published by
Rebekal

சீனாவில் ஆரம்பித்திருந்தாலும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் தற்பொழுது மிகவும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசின் தாக்குதலால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் உலகளவில் கொரோனா வைரஸால் 2,083,607 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 134,632 பேர் உயிரிழந்துள்ளனர். 510,666 பேர் குணமாகியுமுள்ளனர்.
கொரோனா வைரஸ்  சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் அதிகம் தாக்கப்பட்டது வளர்ந்த நாடாகிய அமெரிக்கா தான்.இதுவரை அமெரிக்காவில் 6,44,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 28,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு இறப்பு சதவிகிதம் மட்டும் 4.42 சதவீதமாக உள்ளது. அது  மட்டுமல்லாமல் இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய பல நாடுகளில் கொரோனா கோரமுகத்தை காட்டிவிட்டது.

அந்தந்த நாட்டு மக்கள் தொகை வீதத்தின்  படி, இத்தாலியில் இதுவரை 13.10 சதவீதமும்,ஸ்பெயினில் 10.47 சதவீதமும், பிரான்சில் 11.61 சதவீதமும், பிரிட்டனில் 12.68 சதவீதமும்  உயிரிழப்பு காணப்படுகிறது. பாதிக்கப்பட்டுள்ள 2,083,607 பேரில் ஒட்டுமொத்தமாக 5 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த கொரோனா வைரஸ் மேற்குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. ஆனால், அதையும் மீறி பல நாடுகளிலும் பரவி தான் வருகிறது. இந்தியாவில் இதுவரை 12,456 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 422 உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 1,513 இதுவரை குணமாகியுள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…

43 minutes ago

உங்களுடைய வெற்றியை பார்த்து தந்தை போல் நானும் மகிழ்ச்சி அடைகிறேன் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி…

2 hours ago

சலுகைகள் இல்லைனா தென்னாப்பிரிக்காவுக்கே போயிருப்பார்…மஸ்கை கிண்டல் செய்த ட்ரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்து, அவர் அரசாங்கத்தின் மானியங்கள் மற்றும்…

2 hours ago

சொல்லியும் கேட்காத சின்னச்சாமி நிர்வாகம்…மைதானத்தின் Fuseஐ பிடுங்கிய EB!

பெங்களூர்: பெங்களூரின் எம். சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துமாறு பெங்களூர் மின்சார விநியோக…

3 hours ago

காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

4 hours ago

தெலங்கானா ரசாயன தொழிற்சாலை தீ விபத்து : பலி எண்ணிக்கை 37 -ஆக அதிகரிப்பு!

ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…

5 hours ago