கொரோனாவின் கோர முகம் – உலகளவில் உயிரிழப்பு தெரியுமா.?

Published by
Rebekal

சீனாவில் ஆரம்பித்திருந்தாலும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் தற்பொழுது மிகவும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசின் தாக்குதலால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் உலகளவில் கொரோனா வைரஸால் 2,083,607 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 134,632 பேர் உயிரிழந்துள்ளனர். 510,666 பேர் குணமாகியுமுள்ளனர்.
கொரோனா வைரஸ்  சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் அதிகம் தாக்கப்பட்டது வளர்ந்த நாடாகிய அமெரிக்கா தான்.இதுவரை அமெரிக்காவில் 6,44,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 28,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு இறப்பு சதவிகிதம் மட்டும் 4.42 சதவீதமாக உள்ளது. அது  மட்டுமல்லாமல் இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய பல நாடுகளில் கொரோனா கோரமுகத்தை காட்டிவிட்டது.

அந்தந்த நாட்டு மக்கள் தொகை வீதத்தின்  படி, இத்தாலியில் இதுவரை 13.10 சதவீதமும்,ஸ்பெயினில் 10.47 சதவீதமும், பிரான்சில் 11.61 சதவீதமும், பிரிட்டனில் 12.68 சதவீதமும்  உயிரிழப்பு காணப்படுகிறது. பாதிக்கப்பட்டுள்ள 2,083,607 பேரில் ஒட்டுமொத்தமாக 5 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த கொரோனா வைரஸ் மேற்குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. ஆனால், அதையும் மீறி பல நாடுகளிலும் பரவி தான் வருகிறது. இந்தியாவில் இதுவரை 12,456 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 422 உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 1,513 இதுவரை குணமாகியுள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

5 minutes ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

16 minutes ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

45 minutes ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

49 minutes ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

1 hour ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

1 hour ago