சீனாவின் ஊஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ், மொத்த உலகையும் கதிகலங்க வைத்துள்ளது. இதன் விளைவு காரணமாக பல நாடுகளில் பல கட்டுப்பாடுகள் சட்டம் போடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால், இத்தாலி உள்ளிட்ட ஒரு சில நாடுகள் முழுவதும் முழு அடைப்பு அறிவித்துள்ளது. கொரோனவால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,295லிருந்து 4,627 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,176லிருந்து 1,26,139 ஆக அதிகரித்துள்ளது. பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தோரில் 68,240 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,158லிருந்து 3,169ஆக உயர்ந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,778லிருந்து 80,796ஐ எட்டியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா இதுவரை 123 நாடுகளுக்கு பரவியுள்ளது. இதையடுத்து இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளது.
நார்வே : செஸ் 2025-ல இந்திய வீரர் டி. குகேஷ், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை…
அகமதாபாத் : ஐபிஎல் 2025 கோலாகலமாக நடந்து முடிந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று (ஜூன் 3)-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில்…
கர்நாடகா : சென்னையில் நடந்த 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், "கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர்…
டெல்லி : நாளை மறுநாள் (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி…
டெல்லி : ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஷிஃப்ட் அடிப்படையில்…
டெல்லி : இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி)…