பாகிஸ்தானில் 500- க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் மற்றும் 40 பத்திரிகையாளர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா வைரசால் பாகிஸ்தானில் இதுவரை 21,000 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழப்பு 480-ஐ தாண்டியது. இந்நிலையில், பாகிஸ்தானில் 500- க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் மற்றும் 40 பத்திரிகையாளர்கள் கொரோனா வைரசால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில், பத்திக்கப்பட்ட மருத்துவ ஊழியர்களில் 250 மருத்துவர்கள் மற்றும் 110 செவிலியர்கள் உட்பட 503 பேருக்கு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது வைரஸ் பரவி உள்ளது. பாதிக்கப்பட்ட மருத்துவர்களில் பெரும்பாலோர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.
கொரோனா வைரஸால் மருத்துவ ஊழியர்கள் 13 பேர் உயிர் இழந்து உள்ளனர். இவர்களில் ஐந்து பேர் மருத்துவர்கள். மருத்துவர் ஹக்கிற்கு வென்டிலேட்டர் கிடைக்காததால் இறந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையைத் தொடங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் பல வாரங்களாக புகார் அளித்து வருகின்றனர். இதனால் தான் அவர்கள் வைரஸால் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறப்படுகிறது. இதேபோல், 40 பத்திரிகையாளர்கள் பாகிஸ்தானில் கொரோனா வைரஸை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…