டெல்டா கொரோனாவுக்கு எதிராக சிறப்பான செயல்திறன் கொண்ட தடுப்பூசி – ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்..!

Published by
Sharmi

டெல்டா வைரஸ் கொரோனாவுக்கு எதிராக செயல்திறன் கொண்ட தடுப்பூசி என்று ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அந்நிறுவனத்தின் தடுப்பூசியை பற்றி தெரிவித்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதே சமயம் நாடுகள் அனைத்தும் மக்களை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. முக்கியமாக கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி ஒரு டோஸ் மட்டும் செலுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசிக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து மத்திய அரசுடன் இந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் இவர்களின் தடுப்பூசிக்கு இந்தியாவில் பரிசோதனை தேவையில்லை என மத்திய அரசு கூறியதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் இந்த தடுப்பூசி குறித்து, இந்த தடுப்பூசி டெல்டா வகை கொரோனாக்களுக்கு எதிராக தீவிரமான செயல்திறனுடன் செயல்படுவதாக தெரிவித்துள்ளது. சார்ஸ் வைரஸ் எனப்படும் கொடிய சுவாச கோளாறை ஏற்படுத்தும் பிரச்சனைக்கு எதிராகவும் நீடித்து செயல்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியின் ஒரு டோஸ் அளவு 85% செயல்திறன் கொண்டது. இந்த தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு திறன் 8 மாதகாலம் நீடித்து இருக்கும் என்றும் கூறியுள்ளது.

Published by
Sharmi

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago