இலங்கையில் ஜூன் 7ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

Published by
Rebekal

இலங்கையில் வருகின்ற 28-ஆம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வர உள்ள நிலையில், தற்போது ஜூன் 7-ஆம் தேதி வரையும் இந்த ஊரடங்கு நீக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதிலுமே கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் தீவு நாடான இலங்கையிலும் தினமும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இலங்கையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இலங்கையில் 2,971 பேர் கிட்டத்தட்ட மூவாயிரம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக இலங்கையில் ஏற்கனவே 28 ஆம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 28-ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு முடிவுக்கு வர உள்ள நிலையில், தற்பொழுது கோத்தபய ராஜபக்சே தலைமையிலான கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் ஜூன்  7ஆம் தேதி வரையிலும் இந்த ஊரடங்கு நீடிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை அரசு வெளியிட்டுள்ள புதிய பயண கட்டுப்பாட்டின் படி ஜூன் 7-ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் தொடரும் எனவும், ஆனால் மே 25 மற்றும் மே 31, ஜூன் 4 ஆகிய தேதிகளில் மட்டும் கட்டுப்பாடு தளர்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் மட்டும் அருகிலுள்ள கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதி கொடுக்கப் போவதாகவும், வாகனங்களில் பயணம் செய்வதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய பொருட்களை வாங்க வீடுகளை விட்டு வெளியே சென்று பொருட்களை வாங்க கூடியவர்கள் விரைந்து வாங்கிக் கொண்டு உடனடியாக வீடு திரும்ப வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் மருந்தகங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதுடன் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

27 minutes ago

“சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்” – எடப்பாடி பழனிசாமிக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…

41 minutes ago

அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…

2 hours ago

லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சோகம்.!

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…

2 hours ago

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா புழல் சிறையில் இருந்து விடுவிப்பு.!

சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…

2 hours ago

பிரதமர் மோடிக்கு உயரிய விருது அளித்து கவுரவித்த நமீபியா அரசு..!!

நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…

3 hours ago