தொடங்கியது டிரம்ப் – ஜோ பிடன் நேருக்கு நேர் விவாதம்… இருவரும் சரமாரி குற்றச்சாட்டு..

Published by
Kaliraj

அமெரிக்காவின் உயரிய பொறுப்பான அதிபர் பதவிக்கு  தேர்தல் வரும் நவம்பர் மாதம்  3-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ள குடியரசு கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளரான  ஜோ பிடனும் நேருக்கு நேராக தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றனர்.

அதிபர் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும்  இறுதி கட்ட நேருக்கு நேர் விவாதம் இதுவாகும். இந்த  விவாதத்தின் தொடக்கத்தில் பேசிய அதிபர் டிரம்ப், பெரும்பானமையான  மாகாணங்களில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.  இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி கிடைத்துவிடும் என்றும்,  சில நிறுவனங்களின் தடுப்பூசி சோதனையில் நல்ல  முன்னேற்றம் உள்ளது என்றும், இதேபோல் கொரோனா தொற்றால் இறப்பு விகிதம் குறைந்து உள்ளது. மேலும், அரசின் தடுப்பு நடவடிக்கை மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. என்று குறிப்பிட்டார். பின் தொடர்ந்து பேசிய டிரம்ப், பன்றிக்காய்ச்சல் வந்த போது ஜோ பிடன் என்ன செய்தார்? ஜோ பிடன் போல என்னால் முடங்கி இருக்க முடியாது.  நோய் பாதித்த 99 சதவிதம் பேர் தற்போது குணம் அடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ முக்கிய காரணம் சீனாவே.  நாட்டை முடக்கிய போது தவறு எனக்கூறியவர் ஜோ பிடன். தற்போது முன் கூட்டியே ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என தற்போது கூறுகிறார்.  ஊரடங்கை தவிர்த்து ஜோ பிடனுக்கு எதுவும் தெரியாது.  அதிக தளர்வுகள் கொடுத்தால்தான் பொருளாதாரம் வளரும் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

பின் பேசிய ஜோ பிடன் கூறுகையில்,   நோயுடன் வாழ பழகிக்கொண்டு விட்டோம் என டிரம்ப் கூறினார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உங்களிடம் இருந்து என்ன பதில் உள்ளது?,  கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த டிரம்பிடம் எந்த திட்டமும் இல்லை. டிரம்ப் எதற்காக மாஸ்க் அணிய மறுக்கிறார். ஜனவரி மாதமே கொரோனா பற்றி தெரிந்து இருந்தும் ஏன் அதை மக்களிடம் சொல்லவில்லை.  கொரோனா வைரஸ் பெரிய பிரச்சினையே இல்லை என டிரம்ப் ஆதரவாளர்கள் கூறி வந்தனர். எந்த நாடாக இருந்தாலும் அமெரிக்க தேர்தலில் தலையீட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், எப்போதும், ரஷ்யாவை பற்றி மட்டும் டிரம்ப் ஏன் பேச மறுக்கிறார். அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என்று அவர் தனது உரையில் கூறினார். மேலும், இரு தலைவர்களும் தொடர்ந்து காரசாரமாக விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Published by
Kaliraj

Recent Posts

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

24 minutes ago

ஆந்திராவில் கோர விபத்து : மாம்பழ லாரி கவிழ்ந்து 9 தொழிலாளர்கள் பலி!

ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…

33 minutes ago

ஆக்சியம் 4 திட்டம்: இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…

1 hour ago

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு: இன்று முதல் தரிசனத்துக்கு அனுமதி!

மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10…

1 hour ago

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

13 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

14 hours ago